3/15/16


                                                                   
                                                                பறவைகள்  
                       
              சிறுவர்களே  உங்களுக்கெல்லாம்  பறவைகள் என்றால்  மிகவும் பிடிக்கும் அல்லவா ? , வாருங்கள்  அவைகளைப் பற்றி நிறைய தெரிந்துக் கொள்ளலாம் .பறவைகள்  என்பவை  முட்டை இடுகின்ற விலங்குகள் பிரிவைச் சேர்ந்தது ,விலங்கா என்று ஆச்சர்யமாக  உள்ளதா ? ஆமாம் , விலங்குகளிலுள்ள பறவை எனும் வகுப்பில் 9672 பறவைகள் இருக்கிறது !
             நம் விரல் நீளமும் 1 .8 கிராமும் உள்ள தாரிச் சீட்டிலிருந்து (ஹம்மிங் பேர்ட் )9 அடி உயரமும் 156 கிலோ எடையும் கொண்ட நெருப்பு கோழி வரை பறவைகள் உண்டு.
            அனைத்து  பறவைகளாலும்  பறக்க முடியாது உதாரணமாக நெருப்புக் கோழி, பென்குவின்,கிவி ஆகியவற்றை சொல்லலாம்.பறவைகள் பாலூட்டிகள் போன்று  நான்கு அறை இதயத்தையும் ,வெது வெதுப்பான இரத்தத்தையும் பெற்றிருக்கும் .அதே சமயம் ஊர்வன போன்று  முட்டையிட்டுக்  குஞ்சும் பொறிக்கும்.நம் முடி,நகம் அதிலெல்லாம் உள்ள  கெரோட்டின் தான் பறவையின்  இறகிலும்  இருக்கிறது .ஆனால் நமக்கு நகம், முடி வளர்வது  போன்று எப்பொழுதும்  அதன் இறகு வளராமல்  குறிப்பிட்ட அளவோடு   நின்று விடும் . வருடத்திற்கு ஒரு முறை  சிறகை உதிர்த்து புதிதாக  இறகை  வளர்த்துக் கொள்ளும் .
           
               பறவைகள் கூரிய  பார்வை திறனைக்   கொண்டிருக்கும்.கண்களில் 3 இமைகள் இருக்கும் ,மேல் இமை நம்மைப் போலவும் ,கீழ் இமை துங்கும் போது மூடவும்,மற்றொரு இமை கண்களை அதிக காற்று,ஒளி போன்றவற்றிலிருந்துக்  காப்பற்றவும் உதவும். பறவையின் காது இறகுகளால் மூடி உட்புறமாகவே இருக்கும்,கேட்பதற்கு மட்டுமல்லாமல், பறக்கும் போது உடலின்  சமநிலைக்காகவும் உதவும்.
              பறவையின்  மூளையும் மிகவும் நன்கு  வளர்ச்சியடைந்தது  அதில் உள்ள ஹைபர்ஸ்ட்ரியாடம்  எனும் நமக்கில்லாத பகுதியே பறவைகள் பாட்டெல்லாம் கற்றுக்கொள்ள உதவுகிறதாம்.
             ஆந்தயைத் தவிர பெரும்பாலான பறவைகள் இரவிலேயே தூங்குகின்றன .பறவைகள் பறக்கும் போது "v "வடிவத்திலேயே பறக்கும்.முன்னால் போகும் பறவையின் இறக்கை உண்டாக்கும் காற்றழுத்தத்தினால் பின்னால் போகும் பறவையெல்லாம் சுலபமாக பறக்கும்.டோடோ ,பெரிய ஓக் ,யானை பறவை  போன்ற பறவைகள் அழிந்து விட்டன .

               என்ன குழந்தைகளே பறவைகள்  பற்றி நிறைய தெரிந்து கொண்டீர்களா ?அடுத்த அறிவியல் பக்கம் என்ன   சொல்லப்  போகிறது என்று யோசித்துக் கொண்டே  போய் விளையாடுங்கள்  ,மீண்டும் அடுத்த மலரில் பார்க்கலாம் .

மூலம்:விக்கிபீடியா .



                            

3/4/16

ninaivil ninravargal

நினைவில்  நின்றவர்கள்
                                                   
                 நகைச்சுவை என்பதே நம்மை விலங்குகளிடமிருந்து  வேறுபடுத்திக்  காட்டும் மிகச் சிறந்த  மருந்து,ஆம் நமது மனதிற்கான நல்ல மருந்தாக  நகைச்சுவையைக் கருத வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்,இத்தகைய நல்ல மருந்தை அளித்த
மகத்தான மனிதர்தான் ஏப்ரல் 16 ,1889 ஆம் ஆண்டு பிறந்த  சர் சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின் என்கின்ற சார்லி சாப்ளின் ,ஹாலிவுட் திரையுலகின்
பிரம்மாண்ட நகைச்சுவைக் கலைஞர்.இவருக்கு நடிகர் ,இயக்குநர்,திரைக்கதை ஆசிரியர் ,தயாரிப்பாளர் என பல முகங்கள் உண்டு.
இவர் 'தி சர்க்கஸ்' என்ற படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்றார் ,மேலும் திரைப்படத்  துறையில் இவர் ஆற்றிய பணிகளுக்காகவும் 1972 இல் மற்றொரு ஆஸ்கார் விருது பெற்றார்.1940 இல் வெளியான 'தி கிரேட் டிக்டேடர்' படம் மூலம் சர்வாதிகாரி ஹிட்லரின் கொள்கைகளை கண்டித்தார்.இன்றளவும் இவரது நகைச்சுவைக்கு இணையாக எதையும் ஒப்பிடமுடியாத அளவிற்கு சிறந்தக்  கலைஞர் சாப்ளின்.

அவரைபற்றிய சிறப்பு செய்திகள் சில,


  • சாப்ளினின் கண்கள் நீல நிறத்தில் இருந்தன. கருப்பு வெள்ளைப் படங்களில் மட்டுமே அவரைப் பார்த்திருந்த ரசிகர்கள், அவரை நேரில் பார்க்கும் பொழுது பெரிதும் வியப்புற்றனர்.


  • சாப்ளின் நல்ல சதுரங்க  ஆட்டக்காரர்.


  • சாப்ளினின் புகழினால் சாப்ளினைப் போல் தோற்றம் அளிப்போருக்கான போட்டிகள் பல நடத்தப் பட்டு வந்தன. சாப்ளின் ஒரு முறை அப்போட்டி ஒன்றில் ரகசியமாகப் பங்கு பெற்றார்.இதில் இவரால் மூன்றாம் பரிசையே வெல்ல முடிந்தது


  • இத்தகைய சிறப்பு மிக்க சாப்ளின் 1977 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் அன்றைக்கு
    இறந்தார் ,பணம் பறிப்பதற்காக இவரது உடலை கல்லறையிலிருந்து திருடினர் பதினோரு வாரங்களுக்கு பிறகுஅவரது உடல்  கண்டுபிடிக்கப்பட்டு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டது .அவர் மறைந்தாலும் அவரது நகைச்சுவை நம்மை எப்பொழுதும்  சிரிக்க வைக்கும்.


    புவி நாள்

                                                                          நம் கையில் பூமி !

    நமது தமிழினம் என்றைக்குமே நன்றி உணர்வுக்குப்  பஞ்சமில்லாத இனம் ,எனவேதான் சூரியனுக்கும் நன்றி செலுத்தி பொங்கல் படைக்கிறோம்,
    அதே போல் ஏப்ரல் 22 ஆம் நாள் ஒரு முக்கியமான நாளாக கொண்டாடப்பட வேண்டும், நம்மையெல்லாம்  தாங்கி நிற்கும்  பூமித்தாய்க்கு நன்றி செலுத்தும் நாள் புவி நாள் என அனைத்து மக்களாலும் சொல்லப்படுகிறது. இந்நாளைப் பற்றிய விழிப்புணர்வை நாம் அனைவரும் பெற வேண்டும்.

    புவி நாள் புவியின் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் சரியான மதிப்பீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டதாகும். 1970 ஆம் ஆண்டு அமெரிக்க செனட்டர் கய்லார்ட் நெல்சன் என்பவரால் ஏற்படுத்தப்பட்ட புவி நாள் ஒவ்வொரு வருடமும் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.(நன்றி :விக்கி பீடியா )
         நம்மை தாங்கிக் கொண்டிருக்கும் பூமிக்கு நாம் கொடுக்கும் மிகப் பெரிய பரிசு மாசுபடுத்தும் தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், சீர்படுத்தப் படாத கழிவு நீர் , நச்சுத் தன்மையுள்ள குப்பைகள், பூச்சிக்கொல்லிகள் , காடுகளை அழித்தல் மற்றும் காட்டு விலங்குகளின் பேரழிவு போன்றவை தான்.நாம் புவிக்கு விளைவிக்கும் கேடுகளால் பாதிக்கப்பட்ட போவது நாமும்,நமது சந்ததியினரும் தான்.

    சில மாதங்களுக்கு முன்பு புவி சூடாவது பற்றிய விவாதம் மிக
    பரவலாக பேசப்பட்டது அந்த நேரத்தில் நாமும் சுற்றுச் சூழல் பேரழிவைப் பற்றியெல்லாம் கட்டுரையில் வாசித்து தள்ளியிருப்போம்   ,அதெல்லாம் அந்த கணத்தோடு  மறைந்து விடும் ,அவ்வாறு இல்லாமல் நம் மக்கள் சுற்றுச் சூழலை பேணி காக்க பிரயத்தன பட வேண்டும்.உதாரணமாக நமது தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் 20 வருடங்களுக்கு முன்பு இருந்த மரங்களில் 4 இல் ஒரு பங்கு இப்போது  இருந்தால் அதைவிட நல்ல செய்தி  வேறு இல்லை.
    மரங்களை அழிப்பது புவி சூடதலின் முக்கிய காரணியாக கருதப்படுகிறது .
    புவி சூடாவதால் ஆர்டிக் போன்ற பனி பிரதேசங்களில்  பனி உருகி
    கடலின் நீர்மட்டம் அதிகரிக்கும் எனவும் இதனால் நீரில் மூழ்கி  பல பகுதிகள் அழிந்து விடும் அபாயம் உள்ளதாகவும் அறிவியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

     இந்த அவசர உலகில் நாம் எவ்வளவைப் பற்றித்தான் கவலைப் படுவது என்கிறீர்களா? புவியின் நலனைப் பற்றி நாம் சிந்தித்து தான் ஆகா வேண்டும். இதற்காக நம்மால் முடிந்த சில கடமைகளை நாம் செய்யலாம்.
                        1 .மரங்களை நடலாம் .
                        2 .இயன்றவர்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வாகனங்களை                                  வாங்கலாம்.
                         3 .பிளாஸ்டிக் பைகள் உபயோகபடுத்துவதை குறைத்து காகிதப்                                   பைகளை பயன்படுத்தலாம் .
                         4 .மரங்களை வெட்டாமல் இருக்கலாம்.
                          5 .இளைய தலை முறையினருக்கு சுற்றுச்  சூழலைபேணுவது                                     பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் .

    சுற்றுசூழலைக் காப்பதன் மூலம் நாம் நம்மையே  கத்துக் கொள்கிறோம்   என்பதை அறிந்தால் நாமும் ,புவியும் வளமோடு வாழலாம்.
    புவிநாளை புரிந்து கொள்ளுங்கள், மனித இனத்தை பேணுங்கள்.நன்றி.

    கரையாத கற்பனைகள் .....

    இனியாவுடன்