4/10/16

சிட்டு குருவியும்,காகமும்


பட்டாம் பூச்சிகள் பக்கம்

                                             Image result for crow and sparrow image




 
                                                                குருவியும்,காகமும்

ஒரு காட்டில் பெரிய ஆல மரம் ஒன்று இருந்தது , அந்த ஆல மரத்தில் அழகான  குருவி ஒன்று வாழ்ந்து வந்தது.மழைக் காலம் வாருவதற்கு முன் தன் பழையக்  கூட்டை செப்பனிட்டு பாதுகாப்பாக மாற்ற எண்ணி ,தினமும் நிறைய குச்சி போன்றவற்றைக் கொண்டு வந்து கூட்டில் சேர்த்தது குருவி . வழக்கம் போல் ஒரு நாள் கூட்டிற்கு தேவையான பொருட்களை எடுக்க பறந்து சென்றது .அப்போது பக்கத்து மரத்தில் வசிக்கும் காகம் , குருவியிடம் .இந்த வெய்யிலில் எங்கே செல்கிறாய் எனக் கேட்டது,குருவி கூட்டை கட்டும் பணிக்காக எனக் கூறியதும், நல்ல வெய்யிலில் படுத்து உறங்காமல் அலையாதே ,மேலும் உனக்கு ஏற்கனவே ஒரு கூடு உள்ளதால் காவலை வேண்டாம் எனக் கூறியது காகம்.காகத்தின் பேச்சை பொறுமையுடன் கேட்ட குருவி , இப்பொழுது உழைத்தால் மழை மற்றும் குளிரில் நிம்மதியாய் இருக்கலாம், மேலும் நீ கூட இவ்வாறு செய்தால் உனக்கும் நன்மை என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது.காகம்  குருவியை ஏளனமாய்ப் பார்த்து விட்டு படுத்து உறங்கியது.இப்படியே மாதமும்,நாட்களும் நகர்ந்து போயின.மழைக் காலம் தொடங்கியது .................

கதையின் முடிவை தெரிந்து  ஆர்வமாக உள்ளதா?  அது உங்கள் கையில் தான் உள்ளது ,ஆம் குழந்தைகளே இதற்கு பின் வரும் மீதி கதையை நீங்கள் தான் எழத வேண்டும் .கதையின் முடிவு எவ்வாறு வேண்டுமானாலும் இருக்கலாம் ,
கதையின் முடிவில் கதையின் நீதியையும் இணையுங்கள், சிறந்த கதையின் முடிவு   வசந்தமலரில் வெளியிடப்படும் , புகைப்படத்தையும் பெயரையும்  மறக்காமல் இணையுங்கள் !  அடுத்த இதழில் சந்திக்கிறேன் வேறு
 கதையுடன் .






















 மரங்கள் எல்லாம் மிகுந்த ஓசையுடன் ஆர்ப்பரித்தன.இந்த புயல்,மழையைக் கண்டு காகம் நடுங்கிற்று அது பயந்தது போலவே காற்று அதன் கூட்டை அடியோடு கலைத்துப் போட்டது ,செய்வதறியாது திகைத்த காகத்தின் நிலையை அருகிலிருந்த மரத்தின் கூட்டிலிருந்து பார்த்த குருவி காகத்தை தன் கூட்டிற்கு வருமாறு அன்புடன் அழைத்தது . சிட்டு குருவியின் கூட்டிற்கு சென்ற காகம் தன் தவறை எண்ணி வருந்தியது மேலும் இனி முன்னெச்சரிக்கையுடன் இருப்பேன் எனவும் ,உழைப்பதற்கு தயங்க மாட்டேன் எனவும் நல்ல நண்பர்கள் சொன்னால் கேட்டு நடப்பதாகவும் கூறியது. மழை முடிந்தவுடன் காகம் தன் கூட்டை செப்பனிட தொடங்கியது  குருவியின் உதவியுடன்தான் !

செய்தி: எல்லா குழந்தைகளும்  முன் எச்சரிக்கையுடனும் , நல்ல நண்பர்கள் சொல்றத கேட்டும் நடக்கனும் சரியா?












கதை நேரம்



No comments:

Post a Comment