7/18/17

                         சிறு தானியங்களின் சிறப்புகள் -பிரதீபா பிரேம் 

இப்பொழுது சிறு தானியங்கள் என்பது நம் அனைவரின் செவிக்கும் பழகிய 
வார்த்தை ஆகி விட்டது ,நம்மில் பலர் இதனை சிறு வயதில் உண்டிருக்கலாம்,
பலருக்கு இது வெறும் செவி வழி உணவாக இருந்திருக்கலாம் ...எதுவாக இருப்பினும் இந்த கட்டுரை மூலம்   சிறு தானியங்களின் சிறப்புகளையும்
இதனை எவ்வாறு நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது என்பதையும் நாம் பார்ப்போம் .

பொதுவாக கம்பு,தினை ,வரகு ,கேழ்வரகு,மக்காச்சோளம் ,சோளம் ,குதிரை வாலி ,சாமை  போன்றவை சிறுதானியங்கள் என அழைக்கபடுகின்றது .
                                                                                                                   
                   

கம்பு:



Cumbu













அடங்கியுள்ள சத்துக்கள் : புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள் நார்ச்சத்துக்கள் மற்றும் மாவுச்சத்து . 

மருத்துவ பயன்கள்: உடல் உஷ்ணமடைய செய்வதை குறைக்கிறது. மற்றும் வயிற்றுப்புண் மலச்சிக்கலை தவிர்க்க வல்லது.

 உணவுப் பதார்த்தம்: கம்பு களி, கம்பு சோறு, கம்பு புட்டு கம்பு நூடுல்ஸ், கம்பு பிஸ்கட்

 சோளம் :

Sorghum              
அடங்கியுள்ள சத்துக்கள்: புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், தயாமின், நயாசின், தாது உப்புக்கள் மற்றும் நார்ச்சத்து.


மருத்துவ பயன்கள்: நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை சர்க்கரை நோய் முதலியவற்றை குணப்படுத்துகிறது.


உணவுப் பதார்த்தம்: சோள சோறு, சோள களி, சோள அடை, சோள வடை, சோள பாயசம், சோள மால்ட்,சோள பிஸ்கட், ரொட்டி முதலியன தயாரிக்கப்படுகிறது.


 கேழ்வரகு:

Ragi    

அடங்கியுள்ள சத்துக்கள்: புரதம், மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து பாஸ்பரஸ், இரும்புசத்து.


மருத்துவ பயன்கள்: சர்க்கரை நோய் மற்றும் ரத்தசோகை முதலியவற்றை குணப்படுத்துகிறது.


 உணவுப் பதார்த்தம்: கேழ்வரகு களி, கேழ்வரகு மால்ட், கேழ்வரகு புட்டு, கேழ்வரகு ரொட்டி முதலியன தயாரிக்கப்படுகிறது.

சாமை :


Panivaragu  

அடங்கியுள்ள சத்துக்கள்: புரதம், நார்ச்சத்து, லைசின், அமினோ அமிலம், இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து, ஈரப்பதம், கொழுப்பு, தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்து.


மருத்துவ பயன்கள்: சர்க்கரை நோயை குணப்படுத்துகிறது. செரிமானத்தை எளிதாக்குகிறது. 


உணவுப் பதார்த்தம்: பணியாரம், சாமை சோறு, சாமை மால்ட், சாமை பிரியாணி, இணை உணவு குளூக்கோஸ் முதலியன தயாரிக்கப்படுகிறது.

 திணை:


தானியம்Tenai 



அடங்கியுள்ள சத்துக்கள்: ஈரப்பதம், புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்துக்கள், மாவுச்சத்து மற்றும் வைட்டமின் "பி', பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து.

மருத்துவ பயன்கள்: இதயத்தை பலப்படுத்துவதற்கு உதவுகிறது. 
சிறு மற்றும் குறு தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்: முருக்கு, சீடை, ரொட்டி முதலியன தயாரிப்பதற்கு பயன்படுகிறது.

 வரகு :


தானியம்Varagu 





அடங்கியுள்ள சத்துக்கள்: தாது உப்புக்கள் மற்றும் நார்ச்சத்து.

மருத்துவ பயன்கள்: சர்க்கரை அளவை குறைக்கிறது. மூட்டுவலியை குறைக்க உதவுகிறது.


உணவுப் பதார்த்தம்: முருக்கு, சீடை, வரகு சோறு, வரகு மால்ட் முதலியன தயாரிப்பதற்கு பயன்படுகிறது.

பனிவரகு :


Panivaragu      

அடங்கியுள்ள சத்துக்கள்: ஈரப்பதம், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்து.


மருத்துவ பயன்கள்: சர்க்கரை அளவினை குறைக்கிறது. 


உணவுப் பதார்த்தம்: முறுக்கு, சீடை, அதிரசம் முதலியன தயாரிக்க உதவுகிறது.



குதிரைவாலி :


கதிர்கள் தானியம்

 
அடங்கியுள்ள சத்துக்கள்: நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து உள்ளது.


மருத்துவ பயன்கள்: உடலை சீராக வைக்க உதவுகிறது. சர்க்கரை அளவினை குறைக்க வல்லது ஆண்டி ஆக்ஸிடன்டாக  வேலை செய்கிறது. 


 உணவுப் பதார்த்தம்: இட்லி, தோசை, உப்புமா, கூழ் மற்றும் முருக்கு, சீடை, பக்கோடா முதலியன தயாரிக்கப்படுகிறது.


அடுத்த இதழில் இந்த உணவு வகைகளை எவ்வாறு செய்வது என்பதையும்
காணலாம் .....



7/7/17

எதிர் உயிர்ம மருந்துகளின்(ஆண்டிபயாடிக்)அவசியம்

 எதிர் உயிர்ம மருந்துகளின்(ஆண்டிபயாடிக்)      அவசியம்  !

ஆண்டிபயாடிக் என அழைக்கப்படும் எதிர் உயிர்ம மருந்துகள் நம் உடலில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களை அழிக்கக்  கொடுக்கப்படுகின்றது, இவை  உடலிலுள்ள பாக்டீரியாவை அழிக்கும் ,பாக்டீரியா ஆதிக்கம் வீரியமாக இருக்கும் போது அவற்றின் வளர்ச்சியை தடுக்கவாவது முற்படும் .வைரசினால் ஏற்படும் நோய்களுக்கு இது பயன்படாது.

 எதிர் உயிர்ம மருந்துகள் எப்போது ,எவ்வாறு கொடுக்கப்பட வேண்டும் ?

காது  வலி ,மற்றும் நிமோனியா போன்ற நோய்களுக்கு மருத்துவரை அணுகும் போது பாக்டீரியாவின் தாக்கத்தை பொறுத்து 
எதிர் உயிர்ம மருந்துகள் தரப்படுகின்றது.பொதுவாக இவை வாய்வழியாக கொடுக்கப்படும் மருந்து ஆகும் ,வாயினால் மருந்து எடுத்துக் கொள்ள முடியாதவருக்கு ஊசியின் மூலமாகவும் செலுத்தப்படுவதுண்டு.

மருத்துவர் கொடுக்கும் நாள்கெடு முழுவதும் இதனை எடுத்துக் கொள்வது மிக அவசியம் ,நோயின் தீவிரம் குறைகின்றது என எண்ணி மருந்தை பாதியில் நிறுத்துவதால் முழுமையாக பாக்டீரியாக்கள் அழிக்கப்படாமல் விரைவில் அதே பிரச்சனையயை உடல் சந்திக்க நேரிடும் .

மருத்துவரை அணுகாமல் காய்ச்சல்,இருமல் ,பூஞ்சான் தொற்று போன்ற 
நோய்களுக்கு எதிர் உயிர்ம மருந்துகள் எடுத்துக்  கொள்வது நோயின் தாக்கத்தை அதிகப்படுத்துவதுடன் இன்னும் பல புதிய உடல் நல கேட்டிற்கும்  வழி வகுக்கும் , சரியான முறையில் இதனை எடுத்துக்கொள்ளாத போது  உடலில் உள்ள பாக்டீரியா எதிர் உயிர்ம மருந்துகளுக்கு பழகிவிடும் ,அதனால் அதனை அழிப்பதற்கு இன்னும் மிக வீரியமான வேறு எதிர் உயிர்ம மருந்துகள் கொடுக்க வேண்டிய நிலைக்கு உடல் தள்ளப்படும். 

இயற்கை நமக்கு அளித்த எதிர் உயிர்ம மருந்துகள்

நமக்கு இயற்கை அளித்த  பொருட்களிலேயே எதிர் உயிர்ம மருந்துகள் இருக்கிறது ,நாம் அன்றாடம் செய்யும் சமையலில் சேர்க்கும் பூண்டு,மஞ்சள்,
முட்டைகோஸ் ,தேன் ,தேங்காய் எண்ணெய் ,ஆப்பிள் சீடர் வினீகர் ,இஞ்சி, ஏலக்காய்,கருவேப்பிலை,வெந்தயம்  போன்ற பல பொருட்கள் உடலில் எதிர்ப்புசக்தியை உருவாக்கி கிருமிகளுடன் போராடும் எதிர் உயிர்ம மருந்துகளாகும் .

எனவே பீட்சா ,பர்கர் போன்ற குப்பைகளை உடலுக்குள் கொட்டாமல் முடிந்தவரை நம்ம ஊர்  சமையலை செய்து உடல் நலத்தை  பேணுவோம் ,மேலும் உடல் நலத்தில் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அந்த துறையில் சிறந்த மருத்துவரை அணுகி மருந்து பெறுவதுடன் அவற்றை முறையாக பயன்படுத்தி நலம் பெறுவோம்.








5/1/17

               மாற்றம் காணுவோம் ! மறுபடி செய்வோம் நம் பழைய பூமியை !


வானமும் பூமியும் விரிந்து கிடக்க
கானகத்தில் புள்ளினங்கள்  ஓசை எழுப்ப !
துள்ளி ஓடும் ஆற்று நீரில் நீராடி
திக்கெட்டும் பூமியன்னை பச்சை புத்தாடை உடுத்தினாள்  !

இத்தனையும்  நடந்து இப்பூவுலகம்  பூக்களாலும் ,புல்  பூண்டுகளாலும் நிறைந்து செழித்து மக்களும் ,மாக்களும்  மகிழ்ந்திருக்க நாம் காணும் கனவுகளெல்லாம் நிராசையாகிவிடக் கூடாது !

நீர் ,நெருப்பு ,நிலம்,காற்று,ஆகாயம், இந்த ஐம்பூதங்களும் நமக்காக ,நம்மை காக்க இயற்கை அன்னையால் உருவாக்கப்பட்டது ,நாம் பதிலுக்கு அவைகளுக்கு என்ன செய்தோம் ?

தொழிற்சாலைகளிலிருந்து கழிவு நீரை வெளியேற்றி நீர் நிலைகளை மாசு செய்தோம் ,அதே கழிவுகளைக் கொண்டு நிலத்தில் சேர்த்து நிலத்தின் சத்துக்களை எல்லாம் அழித்தோம் ,"பிளாஸ்டிக்" என்ற மிகப்பெரிய பேயை
பயன்படுத்தி மண்,காற்று,நீர் அனைத்தின் தூய்மையையும்  பெரும்பாலும் அழித்துவிட்டோம் !பிளாஸ்டிக் கழிவுகளை எரித்து வளிமண்டல காற்றையும்
அசுத்தபடுத்தியாயிற்று ! மா,பலா வாழை என பச்சை மரங்களோடும் ,மூலிகைச்செடிகளோடும்  ஓடி  விளையாடிய நாம், நமது அடுத்த தலைமுறைக்கு தந்து விட்டு சொல்வதெல்லாம் அழுக்கும் ,அசுத்தமும், கூடவே நிறைய பிளாஸ்டிக்கும் பரவிய நமது பாரதத்தைத்தான் என நினைக்கும் போது  உள்ளம் விசும்புகின்றது !





தண்ணீருக்காய் வருடத்தில் பாதி நாள் அண்டை மாநிலத்தவரிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம் ,வீரத்  தமிழா.... நமது பழந்தமிழன் கோட்டையும்,கோபுரமும்  மட்டும் காட்டவில்லை குளங்களையும்   , அணைகளையும்  ,ஏரிகளையும் , கூட நமக்கு  விட்டு விட்டுச்  சென்றான் ,ஆனால் நீயோ !!! வெட்கம் ...பணம் என்ற காகித தாளுக்காய் ஆறுகளை விற்றாய்,குளங்களை விற்றாய்,உணவு ஆதாரமாய் திகழும் விவசாய நிலங்களை கூறு  போட்டு விற்றாய் ,வெளிநாட்டுக்காரன் தூக்கி எரியும் காசுக்காய் இருக்கும் கொஞ்ச, நஞ்சநீரையும் நஞ்சு கலந்த குடி பானத்திற்கு விற்க முற்பட்டாய் ! ஐந்து அறிவு உள்ள விலங்கு கூட தனது உடலுக்கு எந்த செடி ,கொடி  தீங்கு விளைவிக்கும் என அறிந்து அதை முகர்ந்து பார்த்து விலகிச் செல்லும் ஆனால் நாமோ எது உடலுக்கும் சுகாதாரத்துக்கும்  தீங்கு விளைவிக்கும் எனத் தெரிந்தும்  தேடி பார்த்து அதை குடிக்கவே ஆசைப்படுகிறோம்.

நமது நீர் நிலைகளில் வளர்ந்த தாமரையும்,அல்லியும்  நீரை ஆவியாக விடாமல் தடுத்து  மிகச் சிறப்பாக நீரை சேமித்து வைக்க உதவியது,அதை எல்லாம் மறந்த நாம் இன்று தெர்மகோலை போட்டு அனைத்து நீரையும் வீண் செய்து உலக அளவில் கேலிக்குள்ளாகி நிற்கின்றோம்.நமது பண்டைய தமிழனின் அறிவியலையும் ,அறிவையும் தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்வதில் தவறில்லையே !

 சிந்தித்து பாருங்கள்  நாளை நமது சந்ததியினர் மாடி வீட்டில் அமர்ந்து அதில் உள்ள கல்லையும் ,மண்ணையுமா உண்டு நஞ்சு கலந்த
குடிபானத்திலா  குளிக்கவும் ,குடிக்கவும் செய்வார்கள்.!விழித்து கொள்
மனிதா... நமக்கென  நாமே  குளங்களையும் ,ஏரிகளையும் நம்  ஊரிலே
உண்டு செய்வோம்  ,உணவு ஆதாரமான விவசாயத்தில் மீண்டும் இறங்குவோம்  ,ஊர் முழுவதும் மரங்களை உண்டு செய்வோம் ,"பிளாஸ்டிக் " என்ற பேயை  நமது உலகத்தை விட்டு ஓட்டுவோம். இந்த புவியை காப்போம்!!


விழிப்புணர்வு தரும் தமிழரின் நிகழ்வுகள்!

1. இன்று மக்களிடையே மரங்களை பற்றிய விழிப்புணர்வு அதிகம் வந்துவிட்டது ,தமிழகத்தில் கல்யாண வீடுகளில் தாம்பூலத்தில்
மரக்  கன்றுகளை  தரும் வழக்கம் அதிகரித்துள்ளது.

2. அண்டை நாடுகளில் அமர்ந்து கொண்டு ஆறுகள்,குளங்களை காப்பாற்றுங்கள் என வெறும் வாயால் கூறுவதோடு நில்லாமல் சிகாகோவில் உள்ள தமிழர்கள் ஒன்று கூடி  "நம்பிக்கை விழுதுகள்" என்ற அமைப்பை விவசாயிகளை காப்பதற்காகவே உருவாக்கி முதற்கட்டமாக ஈரோட்டில் உள்ள 10 ஏரி,குளங்களை  தூர் வாரும் பணியைதொடங்கி உள்ளார்கள் .

3.பாரத பிரதமரின் உத்தரவு படி நமது நீராதாரத்தை அழிக்கும் கருவேல மரங்களை அனைத்து இடங்களிலும் வெட்டி வருகின்றனர்.

4.இன்றும் பல இடங்களில் பிளாஸ்டிக் பையை பயன்படுத்துவதை தவிர்த்து காகித பை ,மற்றும் துணி பைகளை வலியுறுத்துகின்றனர்.( எ.கா ) ட்ரடேர் ஜோஸ்(வட  அமெரிக்கா)