காரணம்
மழைப் பொழிந்தது,
கடவுள் உணவருந்திவிட்டு கை கழுவுகிறார்
அம்மா சொன்ன காரணம் இது !
ஏன் என்று எதிர்க் கேள்வி
கேட்க தெரியா
அறியா வயதது !
இன்றும் மழை பொழிகிறது
அறிவுக்கு இன்று தெரியும்
கார் மேகங்களின் கூட்டமே
மழை என !
ஏற்கத்தான் மனமில்லை
அம்மா சொன்ன காரணம்
அப்படியே இருக்கட்டுமே !
No comments:
Post a Comment