7/12/20


தொல்காப்பியம் கூறும் இல்லறக் காதலும் இக்கால கவிதையும்!


நமக்கு முதல், முதலாக கிடைத்த  2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது என சொல்லப்படும்  தொல்காப்பியம்  கூறும்  காதலைப் பாருங்கள்,

பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு,
உருவு, நிறுத்த காம வாயில்
நிறையே, அருளே, உணர்வொடு, திரு -என 
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே. 

இதன் பொருள் என்னவெனில் ஒரு தலைவனும் தலைவியும் இல்லறத்தில் இணைந்து வாழ
, ஒத்த பிறப்பும்,ஒத்த ஒழுக்கமும்,ஒத்த ஆண்மையும் ,ஒத்த வயதும்,ஒத்த உருவும்,ஒத்த அன்பும்,ஒத்த நிறையும், ஒத்த அருளும், ஒத்த அருளும், ஒத்த செல்வமும் வேண்டும்.

நமது இல்லறக்  காதலை பற்றி இங்கே பார்க்கலாம்,மனைவி பிறந்தகத்திற்கு போன பின் மனைவி கேட்கிறாராம் 

இன்னும் கொஞ்சம் தூங்கட்டுமே
என ஓடி வந்து உங்களை எழுப்பும் 
கடிகையயை கடிந்து  கொள்ள அவளில்லை!

கையில் காபியுடன் நிற்பதே தெரியாமல் 
கணினி  முன் முகத்தை புதைக்கும் போதும் 
செல்லமாய் அதட்டி 
கையில் காபியை கொடுக்க  அவளில்லை!

வேலை முடிந்து மாலை திரும்புகையில் 
கதைகளை கொட்டிக் கொண்டே 
கதவை திறக்க அவளில்லை!

தோசை ஆறிடும் ஆறுது  என
நொடிக்கொருமுறை அனத்த அவளில்லை!
இப்படி எல்லாம் நீங்கள் எண்ணினீர்களா?

இது கவிதை மட்டும் இல்லைங்க மனைவி தன்  
பிரிவாற்றாமையை கணவனிடம் கூறும்
காதலின் வெளிப்பாடு!


No comments:

Post a Comment