கள்ளமில்லா மொட்டுகளின் கண்ணீர் காவியம்
கண்ணேக் கண்மணியே
கட்டிக்கரும்பே என
காணா தேசத்தில் இருக்கும்
தாய்க் கண்ணீர் வடிக்கிறேனடி !
கண்ணாய் வளர்த்த தாயவள்
கதறும் காட்சி கண்முன் வருகுதடி !
அழகிய மலரே உன்னை அலற வைத்த
காமுகனை நஞ்சென சொல்லேனடி
அவன் நஞ்சை உமிழும் நச்சுப் பாம்படி !
குப்புற படுத்தாலும் அழுகைக்
குமுறிக் கொண்டு வருகுதடி !
எப்படி மிரண்டிருப்பாய் ,கதறியிருப்பாய் ,கத்தியிருப்பாய்
இப்படி பட்டியல் போட்டாலும் கூட
இப்பாருலகம் அவர்களைப் பாராமல் போகுமடி !
பொத்தி பொத்தி
பொம்மையோடு பொம்மையாய்
வைத்திருந்த புதையலே!
உன்னைத் தெருநாய் கடித்ததென்று
கண்ணைத் துடை!
உலகமெனும் தோட்டத்தில்
உதித்து வந்த மொட்டுகள் நீங்கள் !
அழகாய் அம்மா கை பிடித்து
ஆர்வமாய் அழகு நடை போட்டு
வேண்டியதை அப்பாவிடம் கேட்டு
வேண்டாமென்றால் வேதனை காட்டி
தாத்தாவுடன் போய் வங்கி வந்து
பாட்டியிடம் காட்டிப் பெருமை படும்
கள்ளமில்லாக் குழந்தைகள் நீங்கள் !
கீழே விழுந்தால்,அழுவதும் -உடன்
மேலே போகும் காத்தாடிப் பார்த்து
சிரித்து எழுவதும்,
அம்மாவைக் கட்டியணைத்தபடி
அப்பாவும் நோகாமல் அவருக்கும்
ஒரு கால் தந்தபடி தூங்கும்
அழகுச் சிற்பங்கள் நீங்கள் !
நல்லவர்களுக்கு அப்பாற்பட்ட
ஆண்களே உங்களுக்கு ஒரு கேள்வி
உங்களைப் பார்த்தால்
அவர்களுக்கு அப்பாவாகவும்
தாத்தாவாகவும் ,அண்ணனாகவும் ,மாமாவாகவும்
தான் தெரிகிறீர்கள் -உங்களுக்கு
எந்தக் கோணத்திலுமே
குழந்தையாக ,தங்கையாக,பேத்தியாக
தெரிவதில்லையா அவர்கள் ?
இளம் மொட்டுக்களை
கசக்கிபோடும் நீங்களெல்லாம்
ஓரறிவுக் கூட இல்லா சதைப்பிண்டங்கள்
இறைவன் என்றொருவன்
இங்கே இருந்தால் நீங்களெல்லாம்
இல்லாமல் போக வேண்டும் !
கடவுள் என்றொருவன்
இங்கே இருந்தால் நீங்களெல்லாம்
காணாமல் போக வேண்டும் !
நீதி என்றொன்று இங்கே இருந்தால்
நீங்களெல்லாம் நிர்மூலமாக வேண்டும் !
இவையெல்லாம்,
ஒரு தாயின் சாபம் மட்டுமல்ல - மாறாக
கள்ளமில்லா மொட்டுகளுக்காக
வரையப்பட்ட
கண்ணீர்க் காவியம் !!
கண்ணேக் கண்மணியே
கட்டிக்கரும்பே என
காணா தேசத்தில் இருக்கும்
தாய்க் கண்ணீர் வடிக்கிறேனடி !
கண்ணாய் வளர்த்த தாயவள்
கதறும் காட்சி கண்முன் வருகுதடி !
அழகிய மலரே உன்னை அலற வைத்த
காமுகனை நஞ்சென சொல்லேனடி
அவன் நஞ்சை உமிழும் நச்சுப் பாம்படி !
குப்புற படுத்தாலும் அழுகைக்
குமுறிக் கொண்டு வருகுதடி !
எப்படி மிரண்டிருப்பாய் ,கதறியிருப்பாய் ,கத்தியிருப்பாய்
இப்படி பட்டியல் போட்டாலும் கூட
இப்பாருலகம் அவர்களைப் பாராமல் போகுமடி !
பொத்தி பொத்தி
பொம்மையோடு பொம்மையாய்
வைத்திருந்த புதையலே!
உன்னைத் தெருநாய் கடித்ததென்று
கண்ணைத் துடை!
உலகமெனும் தோட்டத்தில்
உதித்து வந்த மொட்டுகள் நீங்கள் !
அழகாய் அம்மா கை பிடித்து
ஆர்வமாய் அழகு நடை போட்டு
வேண்டியதை அப்பாவிடம் கேட்டு
வேண்டாமென்றால் வேதனை காட்டி
தாத்தாவுடன் போய் வங்கி வந்து
பாட்டியிடம் காட்டிப் பெருமை படும்
கள்ளமில்லாக் குழந்தைகள் நீங்கள் !
கீழே விழுந்தால்,அழுவதும் -உடன்
மேலே போகும் காத்தாடிப் பார்த்து
சிரித்து எழுவதும்,
அம்மாவைக் கட்டியணைத்தபடி
அப்பாவும் நோகாமல் அவருக்கும்
ஒரு கால் தந்தபடி தூங்கும்
அழகுச் சிற்பங்கள் நீங்கள் !
நல்லவர்களுக்கு அப்பாற்பட்ட
ஆண்களே உங்களுக்கு ஒரு கேள்வி
உங்களைப் பார்த்தால்
அவர்களுக்கு அப்பாவாகவும்
தாத்தாவாகவும் ,அண்ணனாகவும் ,மாமாவாகவும்
தான் தெரிகிறீர்கள் -உங்களுக்கு
எந்தக் கோணத்திலுமே
குழந்தையாக ,தங்கையாக,பேத்தியாக
தெரிவதில்லையா அவர்கள் ?
இளம் மொட்டுக்களை
கசக்கிபோடும் நீங்களெல்லாம்
ஓரறிவுக் கூட இல்லா சதைப்பிண்டங்கள்
இறைவன் என்றொருவன்
இங்கே இருந்தால் நீங்களெல்லாம்
இல்லாமல் போக வேண்டும் !
கடவுள் என்றொருவன்
இங்கே இருந்தால் நீங்களெல்லாம்
காணாமல் போக வேண்டும் !
நீதி என்றொன்று இங்கே இருந்தால்
நீங்களெல்லாம் நிர்மூலமாக வேண்டும் !
இவையெல்லாம்,
ஒரு தாயின் சாபம் மட்டுமல்ல - மாறாக
கள்ளமில்லா மொட்டுகளுக்காக
வரையப்பட்ட
கண்ணீர்க் காவியம் !!
No comments:
Post a Comment